செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 7,486 ஆக உயர்வு : விழுப்புரத்தில் 1500 ஐ நெருங்கியது!
Jul 10, 2020, 11:17 IST1594360071000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,581ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,486 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் விழுப்புரத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 1,400 ஆக அதிகரித்துள்ளது.