சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை!
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், அசோக்நகர், கிண்டி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும்,
Jul 13, 2020, 08:31 IST
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், அசோக்நகர், கிண்டி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும், செங்குன்றம், புழல், சோழவரம், பொன்னேரி, கும்மிடிபூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.