தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்!
Jul 11, 2020, 15:03 IST1594459987000
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.