தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் 14  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அடுத்த 24 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 14  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சேலம், தருமபுரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 14  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.