×

கள்ளழகர் திருக்கல்யாண உற்சவம் – நாளை இணையதளத்தில் ஒளிபரப்பு!

மதுரை மதுரை அழகர்கோவிலில் நாளை நடைபெறும் கள்ளழகர் திருக்கல்யாண உற்சவம் ஆன்லைன் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மதுரை அழகர் கோவிலில் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர தினத்தன்று ஶ்ரீதேவி – பூதேவி சமேத கள்ளழகர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இதன்படி நாளை காலை 10.50 மணி முதல் 11.15 மணிக்குள் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
 

மதுரை

மதுரை அழகர்கோவிலில் நாளை நடைபெறும் கள்ளழகர் திருக்கல்யாண உற்சவம் ஆன்லைன் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மதுரை அழகர் கோவிலில் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர தினத்தன்று ஶ்ரீதேவி – பூதேவி சமேத கள்ளழகர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இதன்படி நாளை காலை 10.50 மணி முதல் 11.15 மணிக்குள் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கல்யாண உற்சவத்தை பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு கண்டுகளிக்க ஆன்லைனில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் அனிதா வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், www.alagarkovil.org, www.tnhrce.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலமும், கோவில் யூடியூப் பக்கத்திலும் திருக்கல்யாண உற்சவம் நேரலை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, வரும் 29ஆம் தேதி மஞ்சள் நீர்சாற்று முறையுடன் திருக்கல்யாண திருவிழா நிறைவுபெற உள்ளது.