செங்கல்பட்டில் ஒரேநாளில் 437 பேருக்கு கொரோனா : 12 ஆயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 437 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 12, 201ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8,787 பேர் கொரோனாவில்
Jul 26, 2020, 12:36 IST
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,409 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 437 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 12, 201ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,755 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 8,787 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 222 பேர் பலியாகியுள்ளனர்.