இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 14 லட்சத்தை நெருங்குகிறது!

 

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 14 லட்சத்தை நெருங்குகிறது!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 61 லட்சத்து 99 ஆயிரத்து 447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 6 லட்சத்து 48 ஆயிரத்து 403 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 99 லட்சத்து 12ஆயிரத்து 966 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 14 லட்சத்தை நெருங்குகிறது!

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 14 லட்சத்தை நெருங்குகிறது!

இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 13,36,861 லிருந்து 13,85,552 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,85,577 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 705  பேர் பலியாகியுள்ளனர்.