×

திருவள்ளூரில் வேகமெடுக்கும் கொரோனா : மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,619 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 327 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,619 ஆக உயர்ந்துள்ளது. இன்று பூவிருந்தமல்லியில் 50, ஆவடி 28 ,
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,526 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 327 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது  இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,619 ஆக உயர்ந்துள்ளது. இன்று பூவிருந்தமல்லியில் 50, ஆவடி 28 , வில்லிவாக்கம் 20 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,009 ஆக அதிகரித்துள்ளது.