ஊரடங்கு புதிய தளர்வுகள் என்னென்ன ? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் பழனிசாமி
Aug 29, 2020, 07:53 IST
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இதன் முடிவில் புதிய தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.