அப்பா கொரோனா தொற்றால் இறக்கவில்லை: வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த்

 

அப்பா கொரோனா தொற்றால் இறக்கவில்லை: வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணியளவில் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அப்பா கொரோனா தொற்றால் இறக்கவில்லை: வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த்

இந்நிலையில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த், “சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அப்பா 6.56-க்கு இயற்கை எய்தினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பா மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்‌ஷன் ஆனது. இதனால் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. கடந்த 2 நாட்களாக எவ்வளவோ மருத்துவர்கள் போராடியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அப்பா நலம்பெறவேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, அடுத்தக்கட்டமாக என்னுடைய வீட்டிற்கு அப்பாவின் உடலை கொண்டு செல்லவுள்ளோம். அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. கொரோனாவால் அப்பா இறக்கவில்லை” எனக் கூறினார்.