×

சென்னை உள்பட மாநகராட்சிகளில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திங்கட்கிழமை முதல் திறப்பதற்கு அனுமதி அழிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. அதன்படி ஏழாம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது. அவ்வபோது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காண விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
 

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திங்கட்கிழமை முதல் திறப்பதற்கு அனுமதி அழிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. அதன்படி ஏழாம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் தற்போது நிலவி வருகிறது. அவ்வபோது தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு காண விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம். ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. ஏற்கனவே பொது மக்கள் தரிசனத்திற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.