சென்னையில் குறைந்த பாதிப்பு! கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா!!

 

சென்னையில் குறைந்த பாதிப்பு! கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா!!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. தினந்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுவருகிறது.

சென்னையில் குறைந்த பாதிப்பு! கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா!!

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 984 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,06,103லிருந்து 1,07,109 ஆக உயர்ந்துள்ளது. ஒருவழியாக 2 மாதங்களுக்கு பின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. இன்று சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,896 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றுவரை கொரோனா பாதிப்பு அயிரத்தை தாண்டியது. நேற்று 1091 என்ற எண்னிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்தது. இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்து 984 ஆக பதிவாகியுள்ளது.