மின்சார வாகன உற்பத்திக்கு ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்பூங்கா அமைக்கும் தமிழக அரசு!

 

மின்சார வாகன உற்பத்திக்கு ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்பூங்கா அமைக்கும் தமிழக அரசு!

மின்சார வாகனங்களுக்கான பயன்பாடு அதிகரித்துவருவதையடுத்து அத்தகைய வாகன தயாரிப்புக்கு என்று தனியான தொழிற்பூங்காவை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மின்சார வாகன உற்பத்தி சூழல் அமைப்புக்காக பிரத்யேகமாக ஒரு பூங்காவை அமைக்க தமிழகம் திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் முதல் மின்சார வாகன பூங்காவாக இருக்கும். சுமார் 50,000 கோடி ரூபாய் முதலீட்டில், உருவாக்கப்படும் இந்த தொழிற்பூங்காவால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தொழில்வழிகாட்டு மையத்தில் உள்ள ஆட்டோ சிஎக்ஸ்ஓ ரவுண்ட்டேபிள் நிர்வாக இயக்குநர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகன உற்பத்திக்கு ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்பூங்கா அமைக்கும் தமிழக அரசு!

சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள மின்சார வாகன தொழிற்பூங்காவில் முதலீடு செய்பவர்களுக்கு 100% ஜிஎஸ்டி திரும்ப அளிக்கப்படுவதுடன், முதலீட்டு மூலதனத்தில் 50% மானியமாகவும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் ஆகியன தமிழகத்தை ஆட்டோ தொழிற்துறையின் முக்கிய மையமாக மாற்றியுள்ளதாக ஆட்டோ சிஎக்ஸ்ஓ ரவுண்ட்டேபிள் நிர்வாக இயக்குநர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.