×

‘அடிப்படை வசதிகள் இல்லை’ : கொரோனா நோயாளிகள் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 240 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,937 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,812 ஆக உயர்ந்துள்ள நிலையில் 3,051 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில்
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 240 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,937 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,812 ஆக உயர்ந்துள்ள நிலையில் 3,051 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாங்காடு அருகே தனியார் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி நோயாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.