×

கொரோனா பாசிடிவ் : தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென்காசி சங்கரன்கோவில் அருகே கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார். தனிமைப்படுத்துதல் வார்டில் இருந்த நபருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தென்காசி சங்கரன்கோவில் அருகே கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டார். தனிமைப்படுத்துதல் வார்டில் இருந்த நபருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொரோனா நோயாளி தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.