“அம்மா பேச்சை தட்டாத புருஷனால் அடிக்கடி அம்மா வீட்டுக்கு போகவேண்டியிருக்கே” பெண் மனமுடைந்தார் -மகனோடு மாடியிலிருந்து விழுந்தார்..
உலகம் எவ்வளவுதான் டெக்னலாஜியில் முன்னேறினாலும் இன்னும் வரதட்சணை மரணங்கள் நடந்து கொண்டு இருக்கிறது .அஹமதாபாத்தில் ஒரு பெண்ணை மணமுடித்து பத்தாண்டுகள் ஆகியும் வரதட்சணை கொடுமைப்படுத்தியதால் மகனோடு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அஹமதாபாத்தில் சந்த்கேடாவில் உள்ள கேசவ் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசிக்கும் மம்தா மற்றும் அவரது கணவர் சிராக் ஆகியோர் 2011 இல் திருமணம் செய்துகொண்டு ஒரு மகனைப் பெற்றனர்.அவரது மகன் ரியான்ஷ்க்கு இப்போது ஆறு வயது ஆகிறது .கல்யாணம் ஆகி இத்தனை வருடம் ஆகியும் அந்த பெண்ணை அவரின் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார் .இதனால் மம்தா தன்னுடைய தந்தை பர்மரிடம் சென்று அடிக்கடி சென்று பணம் வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார் .
பணம் கொடுத்ததும் கொஞ்ச நாள் அவரின் மாமியார் வாயை மூடிக்கொண்டிருப்பார் .பிறகு மறுபடியும் பணம் கேட்டு நச்சரிப்பார் .உடனே மீண்டும் அந்த பெண் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வருவார் .
இந்நிலையில் ஜுலை மாதம் 16ம் தேதி 1 லட்சம் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி அவரின் மாமியார் தொல்லை படுத்தியுள்ளார் .இதனால் அடிக்கடி அம்மா வீட்டுக்கு போக வேண்டியிருக்கே என மனமுடைந்த அந்த பெண் அந்த வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து மதியம் 2 மணியளவில் தன்னுடைய ஆறு வயது மகனுடன் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது பற்றி தகவல் கேள்விப்பட்ட போலீஸ், சம்பவம் நடந்து மூன்று நாள் கழித்து அவரின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்தனர் .