`காதல் கணவனை பிரித்த காதல் மனைவி; விபரீத முடிவெடித்த இளம்பெண்!’- 6 வது நாளில் உயிரை மாய்த்த வாலிபர்

 

`காதல் கணவனை பிரித்த காதல் மனைவி; விபரீத முடிவெடித்த இளம்பெண்!’- 6 வது நாளில் உயிரை மாய்த்த வாலிபர்

காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றார். இந்த நிலையில் மனைவி திடீரென தற்கொலை செய்ததால் அவர் இறந்த 6வது நாளில் கணவனுக்கும் தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், திலிபன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் ராஜன் (26). பெயின்டராக வேலை செய்த வந்த இவரின் மனைவி பவித்ரா (24). இருவரும், 2016ல், காதல் திருமணம் செய்து கொண்டனர்; குழந்தை இல்லை. இதனால், தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

`காதல் கணவனை பிரித்த காதல் மனைவி; விபரீத முடிவெடித்த இளம்பெண்!’- 6 வது நாளில் உயிரை மாய்த்த வாலிபர்

சமீபத்தில், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில், பவித்ரா கணவரை பிரிந்து, பட்டாபிராமில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். அங்கு, கடந்த 15ம் தேதி, வீட்டில் யாரும் இல்லாதபோது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அரவிந்த் ராஜன், நேற்று முன்தினம் அவரது வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த சோகத்தில், கணவனும் துாக்கிட்டு தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்கொலைக்கு முன், அரவிந்த் ராஜன் முகநுாலில் பக்கத்தில், “நானும், பவியும் காதலித்து, திருமணம் செய்து கொண்டோம். அவள் இல்லாமல், என்னால் இருக்க முடியவில்லை. நானும் அவளோடு போறேன். எங்களது சாவுக்கு, அவளது மாமா தான் காரணம்” என்று கூறியிருந்தார். இது குறித்து, திருநின்றவூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, பவித்ராவின் அப்பா ரவி, பட்டாபிராம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், “நான் மாதவரத்தில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறேன். எனக்கு 2 மகள்கள். மூத்த மகள் பவித்ரா, திருநின்றவூரைச் சேர்ந்த அரவிந்தராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால், கடந்த 3 ஆண்டுகளாக எங்களுடன் வசித்துவந்தார். குடும்ப வாழ்க்கை சரியில்லாததால் விவாகரத்து தாக்கல் செய்துள்ளார். அதனால், அவரின் கணவர் அரவிந்த் அடிக்கடி போன் செய்து விவாகரத்தைத் திரும்ப பெறுமாறு தொந்தரவு செய்துவந்தார். கடந்த 15-ம் தே நானும் என் மனைவியும் கடைக்குச் சென்றுவிட்டோம். வீட்டில் பவித்ரா மட்டும் இருந்தார்.

`காதல் கணவனை பிரித்த காதல் மனைவி; விபரீத முடிவெடித்த இளம்பெண்!’- 6 வது நாளில் உயிரை மாய்த்த வாலிபர்

மாலை 3.15 மணிக்கு பவித்ரா போன் செய்து எங்களை சாப்பிட்டு விட்டீர்களா என்று போனில் விசாரித்தார். மாலை 4.30 மணியளவில் பவித்ராவைச் சந்திக்க பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கீர்த்தனா என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் கதவை தட்டியும் பவித்ரா திறக்கவில்லை. போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனே நான் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவைஉடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவித்ரா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். என் மகளின் இறப்பு குறித்துவிசாரித்து சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.