×

மதுரை காமரஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடக்கம் !

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கியது. இந்நிலையில் மதுரை காமரஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில்
 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது.

அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கியது.

இந்நிலையில் மதுரை காமரஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியது. முதலாம் ஆண்டு இளங்கலை தமிழ், ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது. mkuniversity.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.