தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

 

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்!

இந்நிலையில் தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் 2 நாள்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.