கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு துவக்கம் !

 

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு துவக்கம் !

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு துவக்கம் !

தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் 2 நாள்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார்.

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு துவக்கம் !

இந்நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு துவங்கவுள்ளது. 31 ஆம் தேதிவரை http://tngasa.in மற்றும் http://tndceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92,000 இளநிலை இடங்கள் நிரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.