×

பொது முடக்கம் : ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி 29ஆம் தேதி ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை3,409 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 93,537பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்படி
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை3,409 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 93,537பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 29 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கலாமா ? தளர்வா? என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.