×

கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நடிகை வனிதா போலீஸில் புகார்!

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27 ஆம் தேதி இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார்.நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றி கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளன. இதில் நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து
 

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் 27 ஆம் தேதி இயக்குநர் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதற்கான புகைப்படமும் இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பீட்டர் பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீசில் புகார் அளித்துள்ளார்.நடிகை வனிதா, பீட்டர் பால்  திருமணம்  பற்றி கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளன. இதில் நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து கூறினர்.

இந்நிலையில் நடிகை வனிதா நடிகைகள் கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். தன்னை பற்றியும் தனது 3 ஆவது திருமணம் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக வடபழனி போலீசில் வனிதா புகார் அளித்துள்ளார்.

மேலும் சின்னதிரை நடிகர் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் புகாரில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் சூர்யா தேவி கைதாகியுள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு பேர் மீது வனிதா புகார் அளித்துள்ளார்.