×

மலச்சிக்கலை சாதாரணமா நினைக்காதீங்க ; ஆபத்து அதிகம் பாஸு!!

ஒரு மனிதன் தூங்கி எழும்போதே மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலோடு எழுந்தால் தான் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று அர்த்தம். சிலர் காபி குடித்தால்தான் பாத்ரூமுக்கு செல்வேன்; புகைபிடிக்க வேண்டும்; சிறிது தூரம் நடக்க வேண்டும் என்பது போன்ற சில தூண்டுதலின் பேரில் மலம் கழித்தல் என்பது மலச்சிக்கல் வகையில் தான் சேரும். மலச்சிக்கல் ஏற்படும் போது பசி குறையும். அதே போல் ஜீரணம் தன்மையும் மோசமாக மாறிவிடும். மலச்சிக்கல் ஆரம்பத்திலேயே களையப்படவில்லை என்றால் அது
 

ஒரு மனிதன் தூங்கி எழும்போதே மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலோடு எழுந்தால் தான் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று அர்த்தம். சிலர் காபி குடித்தால்தான் பாத்ரூமுக்கு செல்வேன்; புகைபிடிக்க வேண்டும்; சிறிது தூரம் நடக்க வேண்டும் என்பது போன்ற சில தூண்டுதலின் பேரில் மலம் கழித்தல் என்பது மலச்சிக்கல் வகையில் தான் சேரும். மலச்சிக்கல் ஏற்படும் போது பசி குறையும். அதே போல் ஜீரணம் தன்மையும் மோசமாக மாறிவிடும். மலச்சிக்கல் ஆரம்பத்திலேயே களையப்படவில்லை என்றால் அது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை தீர்க்க 4, 5 காய்ந்த திராட்சையைப் தண்ணீரில் ஊறவைத்து அதை நசுக்கி இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதேபோல் கடுக்காய் பிஞ்சை விளக்கெண்ணெயில் வறுத்து, அதை மிக்சியில் போட்டு பவுடராக அரைத்து கால் ஸ்பூன் அளவுக்கு 4 முதல் 5 வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

அதேபோல் சுக்கு ,வெல்லம், கொத்தமல்லி சேர்த்து கசாயம் கொடுக்கலாம்,அதேபோல் பகல் நேரங்களில் குழந்தைகளுக்கு வாழைப்பழங்களை கொடுக்கலாம். மலச்சிக்கலுக்கு மற்றொரு தீர்வு அதிக தண்ணீரை குடிப்பது தான்.நிலவாகை, பொன்னாவரை பொடிகளை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை சரிசெய்யலாம். குடலை வலுப்படுத்தவும் இந்த பொடிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதேசமயம் மாவு பண்டங்கள், எண்ணெய் பண்டங்களை எடுப்பதை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது . அப்படி அதை கண்டுகொள்ளாமல் விட்டால், பசியின்மை, மூலம், ஆசான வாயில் வெடிப்பு போன்ற அபாயங்கள் வர வாய்ப்புண்டு.இதனால் ஒவ்வொரு நாளும் நம் உடலின் கழிவை வெளியே அகற்றுவது என்பதில் நாம் அக்கறையுடனும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.