×

தனியார் பேருந்து மோதி, அரசுப்பள்ளி மாணவர் பலி!

தேனி ஆண்டிப்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி அரசுப்பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவரது மகன் செல்வகுமார் (15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று செல்வகுமார் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுவிட்டு, உறவினருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வருச நாட்டில் இருந்து ஆண்டிப்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து
 

தேனி

ஆண்டிப்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி அரசுப்பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவரது மகன் செல்வகுமார் (15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று செல்வகுமார் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுவிட்டு, உறவினருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, வருச நாட்டில் இருந்து ஆண்டிப்பட்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையயோரம் சென்ற செல்வகுமார் மீது மோதியது. பின்னர் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு அருகில் மின் கம்பத்தின் மீது உரசி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த ஆத்தியப்பன் என்பவர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் போருந்து ஓட்டுநர் ராஜா என்பவரை கைது செய்தனர்.