இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், தம்பதி பலி!

 

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், தம்பதி பலி!

திண்டுக்கல்

வேடச்சந்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குன்னம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். மில் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (26). இவர்களுக்கு 4 வயதில் வீரதிம்மு என் மகள் உள்ளார். இன்று காலை, சதீஷ் குடும்பத்துடன் வேடசந்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தம்மனம்பட்டி அருகே திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையை சதீஷ் கடக்க முயன்றார்.

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், தம்பதி பலி!

அப்போது, எதிரே கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கீதா மற்றும் சிறுமி வீரதிம்மு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி வீரதிம்முவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வேடச்சந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.