×

உடுமலை அருகே அமராவதி கால்வாயில் மூழ்கி 2 பெண்கள் பலி!

திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி கிளை கால்வாயில் மூழ்கி அடையாளம் தெரியாத 2 பெண்கள் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு பகுதியில் இருந்து, நாட்டுக்கல் பாளையம் செல்லும் அமராவதி பாசன கால்வாயில் நேற்று அடையாளம் தெரியாத 2 பெண்களின் சடலம் கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள், கணியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு பெண்களின் சடலங்களையும் மீட்டு,
 

திருப்பூர்

உடுமலைப்பேட்டை அருகே அமராவதி கிளை கால்வாயில் மூழ்கி அடையாளம் தெரியாத 2 பெண்கள் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அடுத்த மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு பகுதியில் இருந்து, நாட்டுக்கல் பாளையம் செல்லும் அமராவதி பாசன கால்வாயில் நேற்று அடையாளம் தெரியாத 2 பெண்களின் சடலம் கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள், கணியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு பெண்களின் சடலங்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்தவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், அமராவதி பிரதான கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தவர்கள், கிளை கால்வாயில் அடித்துவரப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இதனை அடுத்து, சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த பெண்கள் யார் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.