நீச்சல் பழகியபோது விபரீதம்… கண்மாயில் முழ்கி சிறுவன் உள்பட இருவர் பலி!

 

நீச்சல் பழகியபோது விபரீதம்… கண்மாயில் முழ்கி சிறுவன் உள்பட இருவர் பலி!

விருதுநகர்

விருதுநகர் அருகே கண்மாயில் நீச்சல் பழகியபோது நீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சென்னல்குடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மோகன் (11). இவர் நேற்று கடம்பன்குளத்தில் உள்ள உறவினர் சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, சிறுவன் கேட்டு கொண்டதன் பேரில் அவரை அங்குள்ள கண்மாய்க்கு நீச்சல் பயிற்சிக்காக சுந்தரமூர்த்தி அழைத்துச் சென்றார்.

நீச்சல் பழகியபோது விபரீதம்… கண்மாயில் முழ்கி சிறுவன் உள்பட இருவர் பலி!

கண்மாயில் நீச்சல் பழகி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுவன் மோகன் நீரில் மூழ்கினார். அப்போது, அவரை காப்பாற்ற முயன்ற சுந்தரமூர்த்தியும் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் கண்மாயில் இறங்கி இருவரையும் தீவிரமாக தேடினர்.சுமார் 1 மணிநேர தேடலுக்கு பின் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த சூலக்கரை போலீசார், உடல்களை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.