தாமிரபரணி ஆற்றில் முழ்கி பிளஸ் 2 மாணவர் பலி!

 

தாமிரபரணி ஆற்றில் முழ்கி பிளஸ் 2 மாணவர் பலி!

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தாமிரபரணி ஆற்றில் குளித்த பிளஸ் 2 மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த திருமணி மகன் பரத்ஹரிஷ் (17). இவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், பரத்ஹரிஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நண்பர்களுடன் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றார். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற பரத்ஹரிஷ், நீரில் மூழ்கி மாயமாகினார்.

தாமிரபரணி ஆற்றில் முழ்கி பிளஸ் 2 மாணவர் பலி!

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், ஶ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின், மாணவர் பரத்ஹரீஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை அடுத்து, ஏரல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, திருமணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.