×

அருப்புக்கோட்டை அருகே இடி தாக்கி தந்தை – மகன் பலி!

விருதுநகர் அருப்புகோட்டை அருகே கால்நடை மேய்த்தபோது இடி தாக்கியதில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன் (56). இவரது மகன் ராஜேஷ் (27). தந்தை, மகன் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இருவரும் அருணாச்சலபுரம் அருகேயுள்ள கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். பிற்பகலில் அந்த பகுதியில் திடீரென கனமழை பெய்ததால், செந்தூர் பாண்டியன் மற்றும் ராஜேஷ் ஆகியோர்
 

விருதுநகர்

அருப்புகோட்டை அருகே கால்நடை மேய்த்தபோது இடி தாக்கியதில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன் (56). இவரது மகன் ராஜேஷ் (27). தந்தை, மகன் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இருவரும் அருணாச்சலபுரம் அருகேயுள்ள கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.

பிற்பகலில் அந்த பகுதியில் திடீரென கனமழை பெய்ததால், செந்தூர் பாண்டியன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் அருகில் இருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றிருந்தனர். மாலை 4 மணி அளவில் திடீரென மரத்தின் மீது இடி தாக்கியது. இதில் தந்தை – மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த, அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இடி தாக்கி தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.