கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8 வயது சிறுமி பலி!

 

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8 வயது சிறுமி பலி!

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் குளித்த 8 வயது சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் – துர்கா தம்பதியினர். இவர்களது 8 வயது மகள் கோபிகா. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை துர்கா, சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள கிருஷ்ணா கால்வாய்க்கு குளிக்க சென்றார். துர்கா துணி துவைத்து கொண்டிருந்தபோது, திடீரென கால்வாயில் இறங்கிய சிறுமி எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி 8 வயது சிறுமி பலி!

இதனால் துர்கா கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் கால்வாயில் இறங்கி தேடினர். ஆனால் சிறுமியை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்து அங்கு வந்த திருவள்ளூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கால்வாயில் நீண்ட நேரமாக தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.இதனையடுத்து, நேற்று காலை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் கால்வாயில் மீண்டும் தேடினர்.

அப்போது, சிறுகடல் பகுதியில் சிறுமியின் உடல் கரை ஒதுங்கியது. இதனை அடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய, திருவள்ளூர் கிராமிய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.