நெல்லையில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

 

நெல்லையில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

நெல்லை

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் குளித்த பெண், மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை சிந்துப்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (50). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது, மழை பெய்து கொண்டிருந்த நிலையில், ஆற்றில் குளித்துகொண்டிருந்த ராஜேஸ்வரின் மீது மின்னல் தாக்கியது.

நெல்லையில் மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு, அருகில் இருந்தவர் நெல்லை ஜங்சன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.