×

காட்பாடி அருகே உரிய ஆவணமில்லாத ரூ.1.9 லட்சம் பறிமுதல்!

வேலூர் காட்பாடி அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துவந்த 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று காலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆந்திராவில இருந்து தமிழகம் நோக்கி வந்த காரை மறித்து ஆய்வு செய்தனர். இதில், காரில் 1 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துசெல்வது
 

வேலூர்

காட்பாடி அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துவந்த 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று காலை பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆந்திராவில இருந்து தமிழகம் நோக்கி வந்த காரை மறித்து ஆய்வு செய்தனர்.

இதில், காரில் 1 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துசெல்வது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்வது தெரியவந்தது. மேலும், அவரிடம் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிந்தது.

இதனால் அவரிடம் இருந்த பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணத்தை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.