கோபி செட்டிபாளையத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.2.16 லட்சம் பறிமுதல்!

 

கோபி செட்டிபாளையத்தில் உரிய  ஆவணமில்லாத ரூ.2.16 லட்சம் பறிமுதல்!

ஈரோடு

கோபிச்செட்டிபாளையம் அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 2 லட்சத்து 16ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய கொரவம்பாளையம் பகுதியில் இன்று பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.

கோபி செட்டிபாளையத்தில் உரிய  ஆவணமில்லாத ரூ.2.16 லட்சம் பறிமுதல்!

சோதனையில் அந்த நபர் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகன ஓட்டியிடம் விசாரித்ததில், அவர் கோபி செட்டிபாளையம் புதுப்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பதும், பிரபல மசாலா நிறுவனத்தில் பணிபுரியும் அவர், கடைகளில் வசூலித்த பணத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

எனினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோபி வருவாய் கோட்டாட்சியரிடடம் ஒப்படைத்தனர்.