×

திருச்சியில் கஞ்சா விற்ற இளைஞர் கைது- 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்!

திருச்சி திருச்சியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திருச்சி திருவானைகோவில் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, ஶ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரணியம்மன் கோவில் பகுதியில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரை
 

திருச்சி

திருச்சியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருச்சி திருவானைகோவில் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, ஶ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரணியம்மன் கோவில் பகுதியில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரை சோதனையிட்டனர். அப்போது, பேண்ட் பாக்கெட்க்ல் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் 6 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துசசென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் திருவானைகோவில் திம்மராய சமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.