×

வயது முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை முயற்சி – கணவர் பலி!

திருச்சி திருச்சி அருகே கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேலுசாமி(70). இவரது மனைவி தாயம்மாள்(65). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், வேலுசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களை கவனித்து
 

திருச்சி

திருச்சி அருகே கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள வைரிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேலுசாமி(70). இவரது மனைவி தாயம்மாள்(65). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், வேலுசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களை கவனித்து கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாததால், வேலுசாமி – தாயம்மாள் தம்பதியினர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று வீட்டில் இருவரும் அரளி விதையை அரைத்துக்குடித்து தற்கொலைக்கு முயன்றனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வேலுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தாயம்மாள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.