கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி!

 

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி!

திருப்பூர்

காங்கேயம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வரதப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்பராயன். இவரது மனைவி கமலாத்தாள் (70). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கமலாத்தாள் இன்று காலை இயற்கை உபாதையை கழிப்பதற்காக, காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி!

அப்போது, அங்குள்ள விவசாய தோட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியபோது, கமலாத்தாள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய காங்கேயம் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.