×

திருச்சியில் ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த முகமது கலித்கான்(30) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம்
 

திருச்சி

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்திவரப்பட்ட 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த முகமது கலித்கான்(30) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் அவரை அதிகாரிகள் தனியே அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரிடம் இருந்த 48 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ 26 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, முகமது கலித்கானை கைதுசெய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.