திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.43 கோடி தங்கம் பறிமுதல்

 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.43 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி

திருச்சி விமான நிலையத்திற்கு, கோலாலம்பூரில் இருந்து கடத்திவந்த ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கோலாம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்காலை சேர்ந்த மாலினி என்ற பயணி உடைகளுக்குள் மறைத்து கடத்திவந்த 1 கிலோ 100 கிராம் தங்கதை பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.43 கோடி தங்கம் பறிமுதல்

இதேபோல், ராமநாதபுரத்தை சேர்ந்த கலீல் ரகுமான் என்பவரிடம் இருந்து 850 கிராம் தங்க கட்டிகளும், மற்றொரு பயணியிடம் இருந்து 980 கிராம் பசை வடிவிலான தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, மூவரிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 930 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து, தங்கத்தை கடத்தி வந்த பெண் உள்ளிட்ட 3 பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்