×

குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாயும் தற்கொலை முயற்சி!

திருச்சி திருச்சி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரிமிஷின் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சதீஷ்குமார். இவரது மனைவி கீதா(26). இவர்களுக்கு சினேக சொரூபா (7) மற்றும் ரட்சகன்(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சதீஷ்குமார் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால்
 

திருச்சி

திருச்சி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரிமிஷின் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சதீஷ்குமார். இவரது மனைவி கீதா(26). இவர்களுக்கு சினேக சொரூபா (7) மற்றும் ரட்சகன்(4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சதீஷ்குமார் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கீதா, நேற்று குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து விட்டு, பின்னர் தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் மூவரும் மயங்கி விழுந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், மூவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த மணச்சநல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.