காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தற்கொலை!

 

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தற்கொலை!

கோவை

கோவை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் அங்குராஜ்(22). இவர் கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இளைஞர் தற்கொலை!

அங்குராஜ், தனது உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட அங்குராஜ், நேற்று தான் பணிபுரியும் நிறுவனத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்த கோவில்பாளையம் போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து செல்லத்துரை புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.