திருமணம் செய்ய மறுத்த காதலன்… வேதனையில் உயிரை மாய்த்த கர்ப்பிணி…

 

திருமணம் செய்ய மறுத்த காதலன்… வேதனையில் உயிரை மாய்த்த கர்ப்பிணி…

திருவண்ணாமலை

செய்யாறு அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காழியூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் நிர்மலா (20). இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நிர்மலா அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில் நிர்மலா கர்ப்பமடைந்து உள்ளார். இதனை அடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜேஷிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்துவிட்ட ராஜேஷ், நிர்மலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

திருமணம் செய்ய மறுத்த காதலன்… வேதனையில் உயிரை மாய்த்த கர்ப்பிணி…

அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்ன மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிர்மலா, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து, நிர்மலா பெற்றோர் புகாரின் பேரில் செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.