×

சிறுகனூர் அருகே ஏரியில் மூழ்கி 8 வயது சிறுமி பலி!

திருச்சி சிறுகனூர் அருகே ஏரியில் குளித்த 8 வயது சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள தச்சங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் நிஷாந்தினி(8). இவர் நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (21) என்பவருடன் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். ஏரியில் குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும், நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஏரியில் குதித்து இருவரையும்
 

திருச்சி

சிறுகனூர் அருகே ஏரியில் குளித்த 8 வயது சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள தச்சங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் நிஷாந்தினி(8). இவர் நேற்று மாலை அதே கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி (21) என்பவருடன் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். ஏரியில் குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும், நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஏரியில் குதித்து இருவரையும் மீட்டனர். பின்னர், அவர்களை இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். மகேஸ்வரிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.