சங்கராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி மனவளர்ச்சி குன்றிய சிறுவன் பலி!

 

சங்கராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி மனவளர்ச்சி குன்றிய சிறுவன் பலி!

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே மணிமுக்தா ஆற்றில் மூழ்கி மனவளர்ச்சி குன்றிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கல்லேரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைவேல் – பச்சையம்மாள் தம்பதியினர். இவர்களது 16 வயது மகன் சவுந்தரராஜன். மனவளர்ச்சி குன்றிய இவர், அழகாபுரத்தில் உள்ள சிறப்பு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க மணிமுக்தாறு பகுதிக்கு சென் சவுந்தரராஜன், நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை என கூறப்படுகிறது.

சங்கராபுரம் அருகே ஆற்றில் மூழ்கி மனவளர்ச்சி குன்றிய சிறுவன் பலி!

இதனால் பச்சையம்மாள் மணிமுக்தாறு கரை பகுதிக்கு சென்று தேடி பார்த்தார். அப்போது, சிறுவனின் உடைகள் கரையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த பகுதி மக்கள் உதவியுடன் ஆற்றில் இறங்கி தேடினார். அப்போது, செளந்தரராஜன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, குழந்தைவேல் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் மூழ்கி மனவளர்ச்சி குன்றிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது