×

16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- இளைஞர் போக்சோவில் கைது!

திருச்சி மணப்பாறை அருகே 16 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள பீரங்கிமேடு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து திடீரென மாயம் ஆகினார். இதனால் சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது பெற்றோர், துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.
 

திருச்சி

மணப்பாறை அருகே 16 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள பீரங்கிமேடு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து திடீரென மாயம் ஆகினார். இதனால் சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது பெற்றோர், துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர்.

இதனிடையே போலீசாரின் விசாரணையில், பீரங்கிமேடு பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவர் சிறுமியை கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் போலீசார் மீட்டு காவல்நிலையம் அழைத்துசசென்று விசாரித்தனர்.

விசாரணையில், ராமராஜ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து, மணப்பாறை மகளிர் காவல் நிலை போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்தனர்.