10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நெசவு தொழிலாளி போக்சோவில் கைது!

 

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நெசவு தொழிலாளி போக்சோவில் கைது!

திருவண்ணாமலை

ஆரணி அருகே வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நெசவு தொலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் ஆரணி பகுதியில் நெசவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆரணியில் அவர் பணிபுரியும் இடத்தின் அருகேயுள்ள வீட்டில் 10 வயது சிறுமி ஒருவர், தனியாக இருந்துள்ளார்.

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நெசவு தொழிலாளி போக்சோவில் கைது!

இதனை அறிந்த லோகநாதன் வீட்டில் தண்ணீர் குடிக்க செல்வதுபோல நடித்து, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அவர் கூச்சலிடவே, லோகநாதன் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து சிறுமி அளித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் லோகநாதன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றது உறுதியானது. இதனை அடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீசார், பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.