×

பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்… கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு!

தென்காசி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் மகாதேவி (21). இவருக்கும், மருதம்புத்தூரை சேர்ந்த பாரத் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக மகாதேவி, கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த
 

தென்காசி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் மகாதேவி (21). இவருக்கும், மருதம்புத்தூரை சேர்ந்த பாரத் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக மகாதேவி, கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், மகாதேவிக்கு, மேலப்பாவூரை சேர்ந்த அகத்தியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை அறிந்த பெற்றோர் மகாதேவியை கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடிகள் இருவரும் நேற்று ராமச்சந்திரன்பட்டினம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில் மகாதேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அகத்தியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார், மகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.