காதல் திருமணம் செய்த செவிலியர் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

 

காதல் திருமணம் செய்த செவிலியர் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

நெல்லை

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே காதல் திருமணம் செய்துகொண்ட செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம நாங்குநேரி அடுத்த பெரும்பத்தை பகுதியை சேர்ந்தவர் வைகுண்டராஜன். இவரது மகள் சாந்தினி (21). இவர் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது சாந்தினிக்கும், களக்காடு அடுத்த மீனவன்குளத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரெனிஸ் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனையடுத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

காதல் திருமணம் செய்த செவிலியர் தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ விசாரணை!

இதனிடையே, மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரெனிஸ், மது அருந்திவிட்டு அடிக்கடி சாந்தினியுடன் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார். நேற்று காலை தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ரெனிஸ் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சாந்தினி நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாந்தினியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நாங்குநேரி டிஎஸ்பி ஸ்ரீலிசா தலைமையில் களக்காடு போலீசார் சாந்தினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.