டிவி பார்ப்பதில் தகராறு- 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 

டிவி பார்ப்பதில் தகராறு- 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கோவை

சூலூர் அருகே டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமரன். விவசாயி. இவரது மனைவி ஆச்சம்மாள்(38). இவர்களுக்கு திவ்யதர்ஷினி(14) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். திவ்யதர்ஷினி தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்த திவ்யதர்ஷினி, நேற்று முன்தினம் வீடடில் டிவி பார்த்துக் கொண்டிருந்து உள்ளார்.

டிவி பார்ப்பதில் தகராறு- 9ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அப்போது, சேனல் மாற்றுவது தொடர்பாக அவருக்கும், அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மனமுடைந்த திவ்யதர்ஷினி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது, வீட்டிற்கு வந்த அவரது தயார் ஆச்சம்மாள், மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.

இதனால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, சிறுமி திவ்யதர்ஷினியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.