×

திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப் பெண், தீக்குளித்து தற்கொலை… சார் ஆட்சியர் விசாரணை…

பெரம்பலூர் பெரம்பலூர் அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுமணபெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுந்தரம். இவரது மகள் செண்பகம் (20). இவருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் எறையூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மணிவேலுவுடன் திருமணம் நடைபெற்றது. சென்னையில் பணிபுரிந்து வந்த மணிவேலு, மனைவி செண்பகத்தை உடன் அழைத்துச் சென்று வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த
 

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுமணபெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுந்தரம். இவரது மகள் செண்பகம் (20). இவருக்கு, கடந்த பிப்ரவரி மாதம் எறையூர் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் மணிவேலுவுடன் திருமணம் நடைபெற்றது. சென்னையில் பணிபுரிந்து வந்த மணிவேலு, மனைவி செண்பகத்தை உடன் அழைத்துச் சென்று வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அன்று சுந்தரம், செண்பகத்தை சொந்து ஊருக்கு அழைத்து வந்திருந்தார். சத்திரமனையில் இருந்து வந்த செண்பகம் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒரு மாத காலத்தில் புதுமணப் பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது குறித்து பெரம்பலூர் சார் ஆட்சியர் பத்மஜா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.