×

குளித்தலை அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதி விபத்து… புதுமாப்பிள்ளை, தந்தை பலி…

கரூர் குளித்தலை அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை, அவரது தந்தை உயிரிழந்தனர். திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி பாக்கியம். இவர்களது மகன் பிரசாந்த் (29). இவருக்கு கடந்த 17ஆம் தேதி கோவையில் உள்ள உறவினர் மகள் நிர்மலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பொதுமுடக்கத்தால் கோவையில் இருந்து வந்த 4 பேரும், நேற்று பொதுமுடக்க தளர்வு காரணமாக காரில் திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தனர். குளித்தலை அடுத்த மணத்தட்டை பகுதியில்
 

கரூர்

குளித்தலை அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை, அவரது தந்தை உயிரிழந்தனர்.

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி பாக்கியம். இவர்களது மகன் பிரசாந்த் (29). இவருக்கு கடந்த 17ஆம் தேதி கோவையில் உள்ள உறவினர் மகள் நிர்மலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பொதுமுடக்கத்தால் கோவையில் இருந்து வந்த 4 பேரும், நேற்று பொதுமுடக்க தளர்வு காரணமாக காரில் திருச்சிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

குளித்தலை அடுத்த மணத்தட்டை பகுதியில் திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, பிரசாந்த காரின் மீது எதிரே கருர் நோக்கி சென்ற கார் மோதியது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பின்னால் வந்த மற்றொரு காரின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் குமரவேல், பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த குளித்தலை போலீசார், அவர்களை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமரவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மற்ற மூவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு பிரசாந்த் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.